மனித உரிமைகள் பேரவை - வட மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு விடுக்கும் அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

மனித உரிமைகள் பேரவை - வட மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு விடுக்கும் அறிவித்தல்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் என வட மாகாண அளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளர்.

இதுதொடர்பாக வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களை ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியமித்துள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் முன்வைக்க வேண்டுமென கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள், எதிர்வரும் புதன்கிழமை 13ஆம் திகதி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெறவுள்ள ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பின்போது எழுத்து மூலமாக நேரடியாக கையளிக்கமுடியும்.

பொதுமக்களின் நலன் கருதி குறித்த கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கென தனியான பிரிவு அன்று அமைக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment