பேச்சுவார்த்தையை அடுத்து PHI உள்ளிட்ட 15 சுகாதார சேவை சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 6, 2021

பேச்சுவார்த்தையை அடுத்து PHI உள்ளிட்ட 15 சுகாதார சேவை சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 மருத்துவ சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பணிப் புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலைகளுக்கு வந்த பல்வேறு தரப்பட்ட நோயாளர்கள் அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மேற்படி சுகாதாரத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் நேற்றும் முற்பகல் 8 மணி முதல் மதியம் 12 மணிவரை தொடர்ந்தது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் இன்று முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட நேரிடுமென குறித்த தொழிற் சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட்டு, தொழிற்சங்க நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment