இந்தியா, வடக்கு காஷ்மீரின் ஹண்ட்வாரா மாவட்டத்தில் புதன்கிழமை காலை நடந்த மோதலின் போது ஹிஸ்புல் முஜாகிதீன் உயர்மட்ட தளபதிகளில் ஒருவரான மெஹ்ராசுதீன் ஹல்வாய் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது இந்திய பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும் என காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காஷ்மீர் காவல்துறையினர் டுவிட்டர் பதிவில், இது "ஒரு பெரிய வெற்றி" ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் மிகப் பழமையான மற்றும் உயர்மட்டத் தளபதிகளில் ஒருவரான மெஹ்ராசுதீன் ஹல்வாய் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அவர் பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டவர் ஆவார் என்று தெரிவித்துள்ளனர்.
ஹிஸ்புல் முஜாகிதீன் என்பது இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் தீவிரவாத அமைப்பு ஆகும்.
No comments:
Post a Comment