பதிவுத் திருமணத்திற்கு சென்றிருந்த பெண்ணுக்கு கொரோனா : கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை..! - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

பதிவுத் திருமணத்திற்கு சென்றிருந்த பெண்ணுக்கு கொரோனா : கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை..!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பதிவுத் திருமணத்தில் கலந்து கொண்ட பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஊர்காவற்துறை பருத்தியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றையதினம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று இருந்தார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. அதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த போது, குறித்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment