போராட்டத்தில் ஈடுபட்டு, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் விசேட தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற சுற்றுவடத்திற்கு அருகே தனிமைப்படுத்தல் விதிகளை மீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் 31 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சன முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை ரூபா 25,000 கொண்ட தனிப்பட்ட பிணையில் விடுவிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து குறித்த நபர்களில் 16 பேரை தனிமைப்படுத்துவதற்காக பொலிஸார் முயற்சி செய்த நிலையில் அங்கு அமைதியற்ற நிலை தோன்றியிருந்தது.
இதன்போது, பெண் பொலிஸார் ஒருவர் ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக எமது செய்தியாளார்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment