மொரட்டுவ நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற கைதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது..! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

மொரட்டுவ நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற கைதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது..!

(செ.தேன்மொழி)

மொரட்டுவ நீதிமன்ற வளாகத்தில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற கைதியொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மொரட்டுவ நீதிமன்ற வளாகத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து கடந்த மாதம் 8 ஆம் திகதி தப்பிச் சென்றதாக கூறப்பட்ட கைதியை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிளியந்தலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, சந்தேகநபர் கடந்த காலங்களில் மோட்டார் சைக்கிள் கொள்ளை மற்றும் தங்கச் சங்கிலி கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதுடன், சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதன் பின்னரும் அவர் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களும் 3 தங்க சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment