தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது அமைச்சர் சமல் உறுதியளித்துள்ளார் என்கிறார் மாவை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது அமைச்சர் சமல் உறுதியளித்துள்ளார் என்கிறார் மாவை

(எம்.நியூட்டன்)

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் என இலங்கை தமிழரசு கட்சியின்  தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

முல்லைத்தீவில் மகாவலி அதிகார சபைக்கு எட்டு கிராம சேவகர் பிரிவுகள் கையளிக்கப்படுவது பற்றியும் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச சபை தரமிறக்கப்பட்டது பற்றியும் சமல் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியமை தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர்மேலும் தெரிவிக்கையில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் மகாவலி அதிகார சபை பகிர்ந்தளிப்பது தொடர்பில் தமிழ்ப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு கையளிப்பதைத் தடை செய்வதாக அறிவித்திருந்தார்.

இதற்கு மாறாக நாமல் ராஜபக்ஷ அப்பிரதேசங்களை மகாவலி அதிகார சபையிடம் கையளிக்க வருகிறார். என்ற செய்திகள் வந்திருப்பது பற்றி அமைச்சருடன் பேசிய பொழுது, அவ்வாறு நடைபெறாது என வாக்குறுதி வழங்கியுள்ளார்.

மேலும் அமைச்சர் குறிப்பிட்டதாவது அப்பிரதேசங்களில் நவீன முறையில் நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காகவே முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது நான் எமது மக்கள் அப்பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்தி சபை நீர்ப்பாசன நடவடிக்கைகளின் பொழுது தென்னிலங்கையிலிருந்து பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றி அப்பிரதேசங்களின் இனக்குடிப்பரம்பலைச் சீர்குலைக்க முயற்சிக்கப்படும்' என்ற மக்களின் அச்சத்தைக் கூறிப்பிட்டேன்.

அமைச்சர் அவ்வாறு நடைபெற, தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்படாது என்றும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் இவ்விடயம் பற்றிப் பேசித் தீர்மானிப்பேன்' என்றம் குறிப்பிட்டார்.

மேலும் கல்முனை வடக்கு தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் முழுமையான தரமுள்ள பிரதேச செயலகம் நிறுவ கடந்த அரசுக் காலத்தில் அமைச்சரவைப் பத்திரமே தயாரிக்கப்பட்டது. இதற்காக நீண்ட காலமாகவே கல்முனைத் தமிழ் மக்கள் போராடி வருகிறார்கள். இப்பொழுது ஏற்கனவே இருந்த நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் அமைச்சர் என்ற வகையில் அண்மையில் முறையிடடுள்ளனர்' என மாவை சேனாதிராசா அமைச்சரிடம் பேசிய பொழுது, 'அவ்விடயத்திலும் தமிழ் முஸ்லீம் பிரதிகளுடன் பேசி நீதியான தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்,' எனவும் சமல் ராஐபக்ஷ உறுதிப்படத் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment