எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை இலங்கையில் நடத்த முடியும் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை இலங்கையில் நடத்த முடியும்

கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை இலங்கையில் நடத்த முடியும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் அர்ஜூன டி. சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி கடந்த மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமானது.

சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கும்போது 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொல்கத்தா அணியைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா) ஐதராபாத் அணியைச் சேர்ந்த விருத்திமான் சகா டெல்லி அணியை சேர்ந்த அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை சென்னை அணியை சேர்ந்த பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி ஆகியோருக்கும் தொற்று உறுதியானது.

இதனையடுத்து ஐ.பி.எல் தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபை ஒத்திவைத்தது.

இந்த ஐ.பி.எல். தொடரில் 29 ஆட்டங்கள் முடிந்திருந்தது. 31 ஆட்டங்கள் இன்னும் எஞ்சியுள்ளன. எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை செப்டம்பர் மாதம் நடத்த இந்திய கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இங்கிலாந்தில் உள்ள 4 கவுண்டிங் கிளப்புகள் அறிவித்திருந்தன.

இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் அர்ஜூன டி. சில்வா கூறியதாவது எங்களால ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடியும். இதற்காக செப்டம்பரில் போட்டியை நடத்த மைதானங்கள் தயாராகின்றன.

ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்பு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அனைத்து காரணங்களுக்காகவும் இலங்கையை புறக்கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் ஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐக்கிய அரபு இராஜியத்துக்கு முன்னுரிமை கொடுத்தது.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களையும் ஐக்கிய அரபு இராஜியத்தில் நடத்தவே கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment