கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கெஸ்பேவ நகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்தே, குறித்த 33 உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான குறித்த உறுப்பினர், கடந்த 4 ஆம் திகதி சபை அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தமையால், கெஸ்பேவ நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment