பதுளை பொது வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவு மூடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, March 5, 2021

பதுளை பொது வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவு மூடப்பட்டது

பதுளை பொது வைத்தியசாலையில் 31 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சை பிரிவு இன்று தற்காலிகமாக மூடப்பட்டது.

பதுளை பொது வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக்கு சாதகமாக பரிசோதனை மேற்கொண்டார்.

அதன் பின்னர் வைத்தியசாலையின் இரு ஊழியர்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை நேற்றையதினம் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம் புற்று நோய் பிரிவில் வைத்தியர், நோயாளிகள் மற்றும் நோயாளர்களை பராமரிப்பவர்கள் உள்ளடங்கலாக 31 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே பதுளை பொது வைத்தியசாலையின் புற்நோய் சிகிச்சை பிரிவு இன்று தற்காலிகமாக மூடப்பட்டது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி கிடைக்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment