கொழும்பு - டாம் வீதி, ஐந்துலாம்பு சந்திக்கருகில் பயணப் பையினுள் யுவதியின் சடலத்தை வைத்துச் சென்றவரைக் கைது செய்வதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று பகல் கொழும்பு - டாம் வீதி, ஐந்துலாம்பு சந்திக்கருகில் பயணப் பையிலிருந்து யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலம் ஹங்வெல்ல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டமை தெரியவந்துள்ளது.
பயணப் பையை வைத்துச் சென்ற நபர் ஹங்வெல்ல பகுதியிலிருந்து 143 பேருந்தில் அதனை எடுத்து வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் பயணித்த பேருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின்போதே இந்த தகவல் கிடைக்கப் பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் வௌியாகியுள்ள காணொளியின் அடிப்படையில் சந்தேகநபரை அடையாளம் காணுவோர், பொலிஸாருக்கு தகவல்களை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அதன்படி, 071 8591557 அல்லது 011 2433333 ஆகிய இலக்கங்களுக்கு தகவல்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டாம் வீதியில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம், கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக டாம் வீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment