சுப்பர் முஸ்லிம் சிந்தனை இலங்கைக்கு அச்சுறுத்தல் - அரசுக்கும் அறிவித்துள்ளோம் என்கிறது உலமா சபை - News View

About Us

About Us

Breaking

Friday, March 19, 2021

சுப்பர் முஸ்லிம் சிந்தனை இலங்கைக்கு அச்சுறுத்தல் - அரசுக்கும் அறிவித்துள்ளோம் என்கிறது உலமா சபை

சுப்பர் முஸ்லிம் சிந்­தனை இந்­நாட்டு மக்­க­ளி­னதும் முஸ்லிம்களினதும் பிர­தான நீரோட்­டத்­தி­லி­ருந்து விலகிச் செல்லும் நிலை காணப்­ப­டு­வதால், இது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் அச்சம் காணப்­ப­டு­கின்­றது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக இச்­சிந்­தனை இலங்­கை­யிலும் சில­ரிடம் பரவி வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. 

ஆகவே, வழி­த­வ­றிய இச்சிந்தனை தொடர்­பான விட­யங்­களை சமூக வலை­த்த­ளங்­களில் பகிர்ந்து கொள்­வ­தையும், அவற்றை பிர­சாரம் செய்­வ­தையும் முற்றாக தவிர்ந்து கொள்­ளு­மாறு சகல முஸ்லிம்களையும் ஜம்­இய்யா கேட்டுக் கொள்­கின்­றது என உலமா சபையின் புதிய செய­லாளர் அஷ்ஷேக் எம். அர்கம் நுராமித் தெரிவித்­துள்ளார். 

அத்­துடன், வழி­த­வ­றிய சிந்­த­னை­க­ளி­லி­ருந்து சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இது குறித்து ஜம்­இய்­யதுல் உல­மாவின் செய­லாளர் மேலும் தெரிவித்துள்­ள­தா­வது, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம், பல நூற்றாண்­டு­க­ளாக அஹ்­லுஸ்­ஸுன்னா வல் ஜமா­அத்தின் கொள்கையைப் பின்­பற்றி, இந்­நாட்டின் இறை­மைக்கும் பாதுகாப்பிற்கும் எவ்­வித அச்­சு­றுத்­தலும் இன்றி, நாட்டின் சட்டங்களைப் பேணி, ஏனைய சமூ­கங்­க­ளுடன் சக­வாழ்வைப் பேணி வாழ்ந்து வந்த சமூ­க­மாகும்.

அஹ்­லுஸ்­ஸுன்னா வல் ஜமா­அத்தின் கொள்­கைக்கு மாற்­ற­மான வழி­த­வ­றிய சிந்­த­னைகள் முஸ்லிம் சமூ­கத்தில் ஊடு­ருவும் போது அவை தொடர்­பான விழிப்­பு­ணர்வை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்க வேண்­டி­யது சன்­மார்க்க அறி­ஞர்­களின் கட­மை­யாகும். 

அவ்­வாறே பொதுமக்­களும் மார்க்க ரீதி­யான புதிய சிந்­த­னைகள் ஏதேனும் வரும்­போது, அவை தொடர்­பாக ஆலிம்­களை அணுகி தெளி­வு­களை பெற்றுக் கொள்­வதும் அவர்­க­ளது பொறுப்­பாகும்.

இத­ன­டிப்­ப­டையில், சுப்பர் முஸ்லிம் சிந்­தனை பல தெளி­வான அல்குர்ஆன் வச­னங்­க­ளுக்கும், ஆதா­ர­பூர்­வ­மான ஹதீஸ்­க­ளுக்கும் மாற்­ற­மா­ன­வை­யாக இருப்­ப­துடன், அல்-­குர்­ஆ­னிலும், அஸ்-ஸுன்னா­விலும் மறுமை நாளின் அடை­யா­ளங்கள் தொடர்­பாக வந்துள்ள பல விட­யங்கள் பற்­றிய சன்­மார்க்க அறி­ஞர்­களின் ஏகோபித்த கருத்­துக்­க­ளுக்கும் மாற்­ற­மாக, பகுத்­த­றிவைப் பயன்படுத்தி சொந்த விளக்கம் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாகக் காணமுடி­கின்­றது.

அண்­மைக்­கா­ல­மாக இச்­சிந்­தனை இலங்­கை­யிலும் சில­ரிடம் பரவி வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

ஆகவே, வழி­த­வ­றிய இச்­சிந்­தனை தொடர்­பான விட­யங்­களை சமூக வலை­த்த­ளங்­களில் பகிர்ந்து கொள்­வ­தையும், அவற்றை பிர­சாரம் செய்­வ­தையும் முற்­றாக தவிர்ந்து கொள்­ளு­மாறு சகல முஸ்லிம்களையும் ஜம்­இய்யா கேட்டுக் கொள்­கின்­றது. 

அத்­துடன், இச்­சிந்­த­னை­யு­டை­ய­வர்கள் இந்­நாட்டு மக்­க­ளி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் பிர­தான நீரோட்­டத்­தி­லி­ருந்து விலகிச் செல்லும் நிலை காணப்­ப­டு­வதால், இது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் அச்சம் காணப்­ப­டு­கின்­றது. எனவே உரிய அரச அதிகாரிகளுக்கும் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூகப் பொறுப்புதாரிகள் இவ்வாறான கொள்கையில் உள்ளவர்களை நேரான வழியின் பக்கம் நளினமாகவும், அன்பாகவும் நெறிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment