கிழக்கு மாகாணத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள் - News View

About Us

About Us

Breaking

Friday, March 5, 2021

கிழக்கு மாகாணத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

வெளிநாட்டுப் பறவைகள் கிழக்கு மாகாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளன.

குறித்த பறவைகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து வருகை தருவதாக தெரியவருகிறது. 

ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அங்கிருந்து வரும் இப்பறவைகள் இப்பிரதேச மரங்களில் தங்கி முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்து தமது குஞ்சுகளுடன் மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று விடுவதாக பிரதேச வாசிகள் தெரிக்கின்றனர்.

குறித்த பிரதேசங்கள் பறவைகளின் ஓசையினால் அருமையான சூழுலுடன் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு நிருபர்

No comments:

Post a Comment