வடக்கு மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்திலும் 6 பேர் வவுனியா மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டடார்.

யாழ். மாவட்டத்தில் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரிபிரிவைச் சேர்ந்த 3 பேரும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவருக்கும் யாழ். நகரில் கடை வைத்திருக்கும் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேலும் 5 கைதிகளுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

இதேவேளை வெளிநாடு செல்வதற்காக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்ட மூவர் உட்பட வவுனியா பொது வைத்தியசாலையில் 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செட்டிக்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment