காத்தான்குடி பொலிஸ் பிரிவு, கல்முனையில் சில கிராம பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, January 1, 2021

காத்தான்குடி பொலிஸ் பிரிவு, கல்முனையில் சில கிராம பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டது

காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ் குறிப்பிடப்படும் பிரதேசங்கள் இத்தருணத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்படுவதாக கொவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

01. காத்தான்குடி பொலிஸ் பிரிவு

02. கல்முனை பிரதேசத்தில் கீழ் குறிப்பிடப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவு

கல்முனை 1
கல்முனை 1 C
கல்முனை 1 E
கல்முனை 2
கல்முனை 2 A
கல்முனை 2 B
கல்முனை 3
கல்முனை 3 A
கல்முனை குடி 1 (KALMUNAI KUDI 1)
கல்முனை குடி 2 (KALMUNAI KUDI 2)
கல்முனை குடி 3 (மKALMUNAI KUDI3)

No comments:

Post a Comment