இம்மாதம் விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Friday, January 1, 2021

இம்மாதம் விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

(இராஜதுரை ஹஷான்)

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இம்மாதத்தில் விமான நிலையத்தை சுற்றுலா பிரயாணிகளுக்காக உத்தியோகபூர்வமாக திறக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. விமான நிலையத்தை திறக்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும் சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது கருத்துரைக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத் துறை சேவையினை குறுகிய காலத்தில் மீள கட்டியெழுப்ப வேண்டும் என்ற தேவை காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் இம்மாதம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும். திகதி குறித்து வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.

சுற்றுலாத்துறை ஊடாக கொவிட்-19 வைரஸ் கொத்தணி ஒரு போதும் உருவாகாது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை சேவையினை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் கடுமையான முறையில் சுற்றுலாத்துறை சேவையில் கடைப்பிடிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment