பலவந்தமாக சடலங்களை தகனம் செய்வதை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஐ.நா. அதிரடி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

பலவந்தமாக சடலங்களை தகனம் செய்வதை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஐ.நா. அதிரடி

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் வைரஸ் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதே இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமாக இருப்பது மனித உரிமையை மீறும் செயலாகும். இதனை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செயற்படுத்தக் கூடாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட நிபுணர் குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட்19 தொற்றில் மரணிக்கும் நபர்களின் சடலங்களை கட்டாய தகனம் செய்வதன் மூலம் இலங்கையில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படுவதுடன் வன்முறைகள் ஏற்படுவதற்கு இடமிருக்கின்றது.

தகனம் செய்வது ஒரே தீர்மானமாக ஏற்றுக் கொள்வது மனித உரிமை மீறலாகும். கொவிட் தொற்றுக்குள்ளாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதனூடாக வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கையிலோ வேறு நாடுகளிலோ மருத்துவ ரீதியில் அல்லது விஞ்ஞான ரீதியிலான எந்த ஆதாரமும் இலலை. 

மேலும் இலங்கையில் கொவிட்டி மரணித்தவர்களில் குறிப்பிடத்தக்க அளவானவர்கள் முஸ்லிகளாகும். அவர்களின் பூதவுடல்கள் உள்நாட்டு சுகாதார வழிகாட்டலுக்கமைய தகனம் செய்யப்பட்டிருக்கின்றன.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானியின் நிலைப்பாட்டுக்கமைய கொவிட் சடலங்களை தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பது, சடலம் அடக்கம் செய்வதால் நிலத்தடி நீரினுடாக தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதனாலாகும். 

என்றாலும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து சுட்டிக்காட்டி இருப்பது, சடலங்களை தகனம் செய்வது தொற்று பரவலை தடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாகும்.

இலங்கை வைத்தியர் சங்கம் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையிலும் இதனை உறுதி செய்திருக்கின்றது. தொற்று நோய் நிலைமையின்போது மரணித்தவரின் கெளரவத்துக்கும் அதேபோன்று அவர்களின் உறவினர்களின் உணர்வுகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது.

இந்த நிலையில் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மற்றும் வேறு சிறுபான்மை மக்கள் குழுவை பிரித்து செயற்படுவது இனவாத வன்முறை நிலைமை ஏற்படுத்துவதற்கு மற்றும் வர்க்க பேதத்தை வெளிப்படுத்தி காட்டுவதற்கு காரணமாகும் வகையில் தீர்மானங்களுக்கு வருவதை கண்டிக்கின்றோம். 

மேலும் கொவிட்19 தொடர்பான இறுதி அறிக்கையை உறவினர்களால் பரிசோதித்து பார்ப்பதற்கு முன்னரே சில சடலங்கள் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றன.

கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா என ஆராய்ந்து பார்க்குமாறு இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு ஆலாேசனை வழங்கிய பின்னர், சுகாதார ராஜாங்க அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழு, அது தொடர்பான ஆலாேசனைகளை வழங்கி இருந்தும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றது.

எனவே பலவந்தமாக கொவிட் சடலங்களை தகனம் செய்வதை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன் முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்ட தகனங்களுக்காக எந்த முறையிலாவது நிவாரண முறைமையொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment