இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின், ஆறு இலட்சம் ரூபா பணத்துடன் பெண்ணொருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, January 17, 2021

இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின், ஆறு இலட்சம் ரூபா பணத்துடன் பெண்ணொருவர் கைது

(செ.தேன்மொழி)

பொரளை - சிரிசரவுயன குடியிருப்பு தொகுதியில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஆறு இலட்சத்துக்கும் அதிகமான பணத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனாத்துமுல்ல - சிரிசரவுயன குடியிருப்பு தொகுதியில் நேற்று இரவு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குடியிருப்பு தொகுதியின் ஐந்தாம் மாடியில் உள்ள வீடொன்றை சோதனை செய்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், அங்கு காணப்பட்ட அலுமாரியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 638 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஆறு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்தே 59 வயதுடைய பெண்ணொருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருளை நாட்டுக்கு கடத்திய குழுக்களின் செயற்பாடுகள் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், இவருக்கு எவ்வாறு அது கிடைக்கப் பெற்றது என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட பெண் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரும் முன்னெடுத்து வருவதுடன், அந்த பெண்ணை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தவும் எதிர்ப்பார்த்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment