அட்டுலுகமவில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

அட்டுலுகமவில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

நாளை (27) அதிகாலை 5.00 மணி முதல், அட்டுலுகம பிரதேசத்திலுள்ள 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் எஹலியகொடையிலுள்ள, மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய விடுவிக்கப்படும் பிரதேசங்கள்

களுத்துறை மாவட்டம்
பண்டாரகம பிரதேச செயலகம் - அட்டுலுகம பிரதேசம்
659 E - போகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
659 C - பமுணுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
657 A - கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
659 B - கொரவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு
660 - பமுணுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
659 - அட்டுலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
659 E - அட்டுலுகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
660 A - எபிட்டமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
659 D - கல்கெமன்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டம்
எஹலியகொடை பிரதேச செயலகம்
மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு

No comments:

Post a Comment