அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா மீதான தடையை மார்ச் 31 ஆம் திகதி வரை நீட்டித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர்.
இதையடுதது அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது.
வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா உள்ளிட்ட வேலைக்கான விசாக்களுக்கு கடந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் திகதி தடை விதித்தார்.
ஜூன் 22 ஆம் திகதி மேலும் சில விசா கட்டுப்பாடுகளை விதித்தார். அதன்பின் விசா தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீடித்து உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் எச்-1பி விசாவில் அதிக அளவில் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். விசா தடையால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எச்1பி விசாவில் பணியாற்றி வந்த வெளிநாட்டு பணியாளர்கள் பலர் கொரோனா நெருக்கடியால் வேலைகளை இழந்தனர்.
அங்குள்ள சட்டப்படி வேலை இழந்ததும் வெளிநாட்டு நபர் 60 நாட்களுக்குள் வேறு வேலையில் சேர வேண்டும். இல்லையென்றால் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும்.
அப்படி செய்யாமல் மீறுவோரை அழைத்து கொள்ளாத நாடுகளுக்கு விசா வழங்க டிரம்ப் தடை விதித்தார். விசா தடை நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் விசா மீதான தடையை மார்ச் 31 ஆம் திகதி வரை மேலும் நீட்டித்து டிரம்ப் உத்தரவிட்டார். இது குறித்து டிரம்ப் கூறும் போது, விசா தடை விதித்ததற்கான காரணங்கள் மாறாததால் தடை நீட்டிக்கப்படுகிறது” என்றார்.
No comments:
Post a Comment