இவ்வருடம் இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைகளை, எதிர்வரும் வருடம் மார்ச் மாதத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 2021 மார்ச் 01ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை, க.பொ.த. (சா.த) பரீட்சைகளை நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனை தெரிவித்தார்.
வழமையாக வருடாந்தம் டிசம்பர் மாதத்தில் இடம்பெறும் சாதாரண தரப் பரீட்சைகள், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஜனவரி 18 - 27 வரை நடாத்துவதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் கொரோனா இரண்டாம் அலை பரவல் நிலையை அடுத்து, க.பொ.த. (சா.த) பரீட்சைகளை மீண்டும் மார்ச் மாதத்தில் நடாத்த தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment