பொது அமைப்புகளின் கலந்துரையாடல் இடைநடுவில் நிறுத்தம் - சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிசார் தலையீடு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

பொது அமைப்புகளின் கலந்துரையாடல் இடைநடுவில் நிறுத்தம் - சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிசார் தலையீடு

காரைதீவு சகா

கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை, தமிழ் இளைஞர் ஒன்றியம், புத்திஜீவிகள் ஒன்றியம் போன்ற பொது அமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய கல்முனை மாநகர சபை பட்ஜட் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுட்டும் கலந்துரையாடலும் ஊடகச் சந்திப்பும் சுகாதார அதிகாரிகள் பொலிசாரின் தலையீட்டால் இடைநடுவில் கலைந்தது.

இச்சம்பவம் இன்று (6) இடம்பெற்றது. மேற்படி கூட்டம் பாண்டிருப்பு 1சி பல்தேவைக் கட்டடத்தில் காலை 10.30 மணியளவில் பொது அமைப்புகளின் பிரதிநிதி க.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபை பட்ஜட்டுக்கு வாக்களித்த தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொது அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் எதிர்ப்பாக வாக்களித்த தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சந்திரசேகரம் ராஜன், க.சிவலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த எஸ்.செல்வராசா, வ.சந்திரன் கே.விஜயலட்சுமி ஆகியோர் மட்டுமே சமுகமளித்திருந்தனர். ஆதரவாக வாக்களித்த தமிழ் உறுப்பினர்கள் யாருமே வரவில்லை.

மாநகர சபை உறுப்பினர்களான க.சிவலிங்கம், சந்திரசேகரம், ராஜன் ஆகியோர் பொதுமக்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தவேளை சுமார் 11.15 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கணேஸ்வரன் கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர் சகிதம் பொலிசார் சமுகமளித்தனர்.

கொரோனா சட்டத்தின்படி இப்பிராந்தியத்தில் பொதுக்கூட்டம் ஒன்றுகூடல் நடாத்த முடியாது எனவே கலைந்து செல்லுங்கள் என கேட்டுக் கொண்டனர். அதற்கிணங்க கூட்டம் இடைநடுவில் கலைந்தது. பிறிதொரு தினத்தில் உரிய அனுமதி பெற்று கூட்டம் நடாத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment