மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கோவிட். தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

34ம் விடுதியில். சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய கொத்தியாவலையைச் சேர்ந்த ஒருவரே இன்று (30) மரணமடைந்துள்ளார்.

இவருக்கு மேற்கொள்ளப்பட்ட. அண்டிஜன் பரிசோதனையில் கொவிட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 34 ஆம் இலக்க விடுதி தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் நோயாளிகளுக்கும் அண்டிஜன். பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த விடுதியில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த மூன்று பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையும். அதில் ஒருவர் மரணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment