நெடுந்தீவு மின்சார தடங்கலுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

நெடுந்தீவு மின்சார தடங்கலுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

நெடுந்தீவு மக்கள் எதிர்கொண்டுள்ள மின்சார தடங்கல் தொடர்பான இடையூறுகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினை எதிர்கொள்ளக் கூடிய மின்சார பொறிமுறை ஒன்றினை பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக நெடுந்தீவு பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

குறித்த மின்சார தடை காரணமாக ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதயைடுத்து, குறித்த விடயம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் ஆராய்ந்த அமைச்சர் புதிய பொறிமுறையை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சூரிய வெளிச்சம், காற்றாலை, எரிபொருள் போன்ற மூலங்களினை கொண்ட குறித்த கூட்டு மின்சார உற்பத்தி பொறியை பொருத்தியதன் பின்னர் நெடுந்தீவு பிரதேசத்தில் மின்சார தடங்கல்கள் ஏற்படாது தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment