பாலியல் பலாத்கார வழக்கில் பிரேசில் பிரபல கால்பந்து வீரர் ராபின்ஹோவுக்கு சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

பாலியல் பலாத்கார வழக்கில் பிரேசில் பிரபல கால்பந்து வீரர் ராபின்ஹோவுக்கு சிறைத் தண்டனை

பாலியல் பலாத்கார வழக்கில் பிரபல பிரேசில் கால்பந்து நட்சத்திரம் ராபின்ஹோவுக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை இத்தாலிய நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மிலன் அணிக்காக விளையாடி வந்த பிரேசில் கால்பந்து நட்சத்திரம் ராபின்ஹோவ் ஜனவரி 22, 2013 இல் தனது மனைவி உட்பட 6 பேர் கொண்ட ஒரு குழுவுடன் இரவு விடுதி ஒன்றில் மது அருந்தியுள்ளார். அதே விடுதியில் அல்பேனிய இளம் பெண் தமது நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது மனைவியை குடியிருப்புக்கு அனுப்பி வைத்துவிட்டு, ராபின்ஹோ நண்பர்களுடன் மீண்டும் மது அருந்தியுள்ளார். அதுமட்டுமின்றி, பிறந்தநாள் கொண்டாடும் அந்த இளம் பெண்ணையும் தங்கள் கூட்டத்தில் இணைத்துக் கொண்டு அவர் சுயநினைவை இழக்கும் மட்டும் மது அருந்த வைத்துள்ளனர்.

அதன் பின்னர் குறித்த பெண்ணை தனிப்பட்ட அறை ஒன்றில் அழைத்துச் சென்று, ராபின்ஹோ மற்றும் அவரது நண்பர் ஒருவரும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். 

இதனையடுத்து ராபின்ஹோவின் நான்கு நண்பர்களும் அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இத்தாலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இந்த விவகாரம் தொடர்பாக ராபின்ஹோவ் 2014 இல் கைதானார்.

தற்போது ராபின்ஹோவுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், இழப்பீடாக குறித்த பெண்ணுக்கு 73,000 டொலர் வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இருப்பினும், இன்னும் 90 நாட்களுக்குள் இந்த தீர்ப்புக்கு எதிராகவும் ராபின்ஹோ மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. தற்போது 36 வயதாகும் ராபின்ஹோ குறித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார்.

பாலியல் பலாத்காரம் வழக்கில் பிரபல பிரேசில் கால்பந்து நட்சத்திரம் ராபின்ஹோவுக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை இத்தாலிய நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

No comments:

Post a Comment