சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றையதினம் மேலும் 122 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 2414 ஆண் சிறைக் கைதிகளும் 189 பெண் சிறைக் கைதிகளும் கொரோனா அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்தோடு, சிறைச்சாலை அதிகாரிகள் 103 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி சிறைச்சாலையில் நெருங்கிய தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3087 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment