பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு - அதிபர் நியமனம் விரைவாக வழங்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு - அதிபர் நியமனம் விரைவாக வழங்கப்படும்

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவிருந்த பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 3 வாரங்களுக்கு இணையம் மூலமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கொவிட் 19 கொரோனா தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இணையம், வானொலி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் நவம்பர் 15 முதல் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் நாடு தழுவிய ரீதியில் உள்ள 170 தேசிய பாடசாலைகளுக்கும் அதிபர் நியமனம் விரைவாக வழங்கப்படும் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஷ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment