கினிகத்தேனையில் பொலிஸ் சார்ஜன் உட்பட நால்வருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 25, 2020

கினிகத்தேனையில் பொலிஸ் சார்ஜன் உட்பட நால்வருக்கு கொரோனா

கினிகத்தேனை பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜன் உட்பட நால்வருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் சகாதேவன் தெரிவித்தார்.

ஹங்காராம்பிடிய - தம்பதென்ன பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பிலிருந்து வந்த போது கினிகத்தேனை கலுகல பொலிஸ் சோதனைச் சாவடியில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு குறித்த பெண் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அவருக்கு தொற்று இருப்பது உறுதியான நிலையில் குறித்த பெண்ணை சுயதனிமை நிலையத்துக்கு அழைத்துச் சென்றதுடன் அவரது உறவினர்கள் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மருத்துவ அறிக்கை 25ஆம் திகதி கிடைக்கப் பெற்ற நிலையில் தொற்றுக்குள்ளான குறித்த பெண்ணின் உறவினரான பொலிஸ் சார்ஜன் மற்றும் அவரது மைத்துனர் ஒருவருமாக இருவருக்கு தொற்றிருப்பது உறுதியானது.

இதேவேளை, கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்டத்திலும் 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கும், 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.

மேற்படி நால்வரையும் சுயதனிமை மத்திய நிலையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் கே.சகாதேவன் தெரிவித்தார்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஷ்ணா)

No comments:

Post a Comment