மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து குரேஷியா பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் (Andrej Plenkovic) தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஐரோப்பிய நாடானா குரேஷியாவில் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் (வயது 50) பிரதமராக உள்ளார்.
இவரது மனைவி அனா மஸ்லேக் பிளென்கோவிக்கிற்கு நேற்று முன்தினம் (28) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
இருந்தபோதும், அவர் தன்னை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அரசு செய்தி தொடர்பாளர் மார்கோ மிலிக் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
குரேஷியாவில் 1.23 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,655 பேர் பலியாகி இருக்கின்றனர்.
No comments:
Post a Comment