தொற்று நோய் வைத்தியாசாலையிலிருந்து தப்பிச் சென்ற குழந்தை கண்டுபிடிப்பு - தாய் தலைமறைவு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

தொற்று நோய் வைத்தியாசாலையிலிருந்து தப்பிச் சென்ற குழந்தை கண்டுபிடிப்பு - தாய் தலைமறைவு

அங்கொட தொற்று நோய் வைத்தியாசாலையிலிருந்து தாயுடன் தப்பிச்சென்ற குழந்தையை எஹெலியகொட, யாபா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொவிட்-19 கொரோனா தொற்றால் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும் குழந்தையும் நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளனர் என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நோயாளி அறை 04 இல் சிகிச்சை பெற்று வந்த எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த இருவருமே நேற்று இரவு 9 மணியளவில் தப்பிச் சென்றுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தப்பியோடிய இருவரையும் கண்டுபிடிக்க பொலிஸார் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தாயுடன் தப்பிச் சென்ற குழந்தையை எஹெலியகொட, யாபா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டு கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தாயுடன் தப்பி ஓடிய கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட இரண்டரை வயதுக் குழந்தை எஹெலியகொட, யாபா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய் எஹெலியகொட, யாபா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் குறித்த குழந்தையை ஒப்படைத்து விட்டுத் தப்பி ஓடி விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த வீட்டில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தப்பிச் சென்ற 26 வயதான தாயைக் கண்டு பிடிக்க மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment