விடைபெறும் முடிவில் மாற்றமில்லை என்கிறார் மஹிந்த தேசப்பிரிய - விடுதியிலிருந்து வெளியேறிவிட்டேன் என்கிறார் ரட்ணஜீவன் ஹூல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

விடைபெறும் முடிவில் மாற்றமில்லை என்கிறார் மஹிந்த தேசப்பிரிய - விடுதியிலிருந்து வெளியேறிவிட்டேன் என்கிறார் ரட்ணஜீவன் ஹூல்

(ஆர்.ராம்)

முன்னதாக அறிவிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் அழைப்பு விடுத்தாலும் தொடர்ந்தும் நீடிக்கும் எண்ணமில்லை என்று அப்பதவியைப் பூர்த்தி செய்யவுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய உட்பட ஏனைய உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹல், பேராசிரியர் நளின் அபேசேகர ஆகியோர் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களின் பதவிக்காலம் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் தற்போதைய தவிசாளரிடத்தில் அடுத்தகட்டம் தொடர்பில் வினவியபோது அதற்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் தற்போதைய பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தொடரப்போவதில்லை என்று முன்னதாகவே அறிவித்திருந்தேன். ஆகவே அந்த முடிவில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை. 

திணைக்களத்தில் எனது அலுலக அறையினை ஒப்படைப்பதற்குரிய உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளேன். ஆவணங்களை ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட பணிகளை தற்போது முன்னெடுத்துள்ளேன் என்றார்.

இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கூறுகையில், எனக்கு வழங்கப்பட்டிருந்த விடுதியிலிருந்து வெளியேறிவிட்டேன். தற்போது ஆணைக்குழுவில் உள்ள அலுவலகத்தினை ஒப்படைக்கும் பணி மட்டுமே மீதமாகவுள்ளது. அதனையும் விரைவில் முறையாக ஒப்படைக்கவுள்ளேன் என்றார். 

அதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களை சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் ஆகிய ஐவர் கொண்ட பாராளுமன்ற பேரவை பரிந்துரைக்கவுள்ளது.

நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த பாராளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் உரித்தைக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment