சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க வெலிக்கடை சிறை மருத்துவமனையின் மருந்தாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இன்று காலை மருத்துவர்கள் அடங்கலாக 50 ஊழியர்களுக்கும் கைதிகள் குழுவினருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகள் மற்றும் கைதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கொவிட்-19 பாதிக்கப்பட்ட குறித்த மருந்தாளர் அண்மையில் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்குச் சென்று அதிகாரிகள் மற்றும் கைதிகள் குழுவினருக்கு மருந்துகளை வழங்கியிருந்தார் என்று தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த மருந்தாளர் பொரளையை வதிவிடமாகக் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment