கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Friday, November 13, 2020

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக குறித்த 5 நட்சத்திர ஹோட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோட்டலில் உடற்பயிற்சி பிரிவில் பணியாற்றும் குழுவின் ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று நேற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடற்பயிற்சி பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தொற்றுக்குள்ளானோருடன் முதல் மற்றும் இரண்டாவது தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் இனங்காணப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளார்கள் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment