பொது நிறுவனங்கள் குழுவின் கூட்டத் தொடர் (கோப்) நாளையதினம் முதன்முறையாக இணையத் தொழில் நுட்பத்தின் காணொளி ஊடாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இணைய வழி காணொளி ஊடாக நாளையதினம் இக்கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, களனி கங்கையின் நீர் மாசுபாடு தொடர்பில் கோப் குழுவில் நாளை கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதன்போது, சுகாதாரம், கைத்தொழில் மற்றும் பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகங்களின் செயலாளர்கள் காணொளி ஊடாக இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment