கிராம அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு - மன்னாரில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 3, 2020

கிராம அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு - மன்னாரில் சம்பவம்

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்பட்டுள்ளதோடு அவர் இனம் தெரியாத நபர்களினால் கூறிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளமையும் தெரிய வருகின்றது.

தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ். றொசேரியன் லம்பேட்

No comments:

Post a Comment