அரிசிக்கு உச்சபட்ச விற்பனை விலை நிர்ணயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

அரிசிக்கு உச்சபட்ச விற்பனை விலை நிர்ணயம்

அரிசி ஆலை உரிமையாளர்கள் அல்லது உற்பத்தியாளர்கள் தொடர்பில், அரிசிக்கு உச்சபட்ச விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (04) முதல் அமுலாகும் வகையில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய பின்வருமாறு அரிசிகளுக்கு விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சம்பா - ரூ. 94

நாட்டரிசி - ரூ. 92

பச்சை அரிசி - ரூ. 89

No comments:

Post a Comment