மேல் மாகாண ஊரடங்கு தொடர்பில் இவ்வாரம் இறுதித் தீர்மானம் - அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

மேல் மாகாண ஊரடங்கு தொடர்பில் இவ்வாரம் இறுதித் தீர்மானம் - அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அடுத்த வாரம் தொடக்கம் கடுமையான முறையில் செயற்படுத்தப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மேல் மாகாணம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை வெற்றிக் கொள்ள முடியும்.

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பில் இவ்வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் தொடக்கம் கடுமையாக செயற்படுத்தப்படும்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே நெருக்கடி நிலையினை வெற்றிக் கொள்ள முடியும். ஆகவே பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment