நண்பர்களின் வீட்டுக்கு வந்து திரும்பியவர் விபத்தில் பலி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

நண்பர்களின் வீட்டுக்கு வந்து திரும்பியவர் விபத்தில் பலி

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 35ஆம் கிராம வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (11) இடம்பெற்ற இவ்விபத்தில், கடொல் மிஸ்திரிகே கமல் வர்ண தேஷப்பிரிய (35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது இருப்பிடமான ரஜகரதென்ன பிரதேசத்திலிருந்து தனது நண்பர்களின் வீட்டுக்கு வந்துவிட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வெட்டப்பட்டுக் கிடந்த மரத்துடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிக்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தை பார்வையிட்டதுடன், அதன் பின்னர் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மணல்சேனை நிருபர் - நடனசபேசன் சாமித்தம்பி)

No comments:

Post a Comment