ஜனாதிபதியின் எண்ணக்கருவில் 5,000 குளங்கள் புனரமைக்கும் செயல் திட்டத்தில் 87 குளங்கள் மட்டக்களப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் 5,000 குளங்கள் புனரமைக்கும் செயல் திட்டத்தில் 87 குளங்கள் மட்டக்களப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ஷவின் எண்ணக்கருவில் 5000 குளங்களை புனரமைக்கும் செயல் திட்டத்தினை நாடு பூராகவும் நடைமுறைப்படுத்துவதற்கான முதலாவது கூட்டமும் விவசாய அபிவிருத்திக் குழுவின் விசேட கூட்டமும் மட்டக்களப்பில் நடைபெற்றது.

இக்கூட்டமானது நேற்று (புதன்கிழமை) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

சுபீட்சத்தை நோக்கிய கிராமிய பொருளாதாரத்தினை அபிவிருத்தியூடாக நஞ்சற்ற உணவு உற்பத்தியினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஐந்து வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி செய்யப்படாத குளங்கள் மற்றும் வாய்க்கால்கள், தூர்ந்து போன குளங்கள், அணைக்கட்டுகள் போன்றவற்றை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 17 கமநல சேவை நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு கமநல சேவை நிலைய பிரிவுகளிலும் மூன்று முதல் ஐந்து குளங்கள் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி இலங்கை முழுவதும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வேலைத்திட்டமானது ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக விவசாய அமைப்பினர் பொதுமக்கள் நலன்விரும்பிகள் மாணவர்கள் தொண்டர்கள் மூலமாகவே இந்த வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன். 

மத்திய மாகாண அரசாங்கத்தின் கீழ் வருகின்ற 87 குளங்கள் மட்டக்களப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

No comments:

Post a Comment