துபாய், எத்தியோப்பியா, இந்தியாவிலிருந்து 446 பேர் இலங்கையை வந்தடைந்தனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

துபாய், எத்தியோப்பியா, இந்தியாவிலிருந்து 446 பேர் இலங்கையை வந்தடைந்தனர்

துபாய், எத்தியோப்பியா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து 446 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இன்று (11) காலை எத்தியோப்பியாவில்‌ இருந்து ET 8804 எனும் விமானம்‌ ஊடாக 110 பயணிகளும்‌, துபாயில்‌ இருந்து UL 226 எனும் விமானம்‌ ஊடாக 270 பயணிகளும்‌ இலங்கை வருகை தந்துள்ளனர்‌.

அத்துடன், UL 1024 எனும் விமானம்‌ ஊடாக இந்தியாவின் மும்பாயில்‌ இருந்து 66 பயணிகள்‌ இலங்கையை வந்தடைந்துள்ளனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று (10) காலை துபாயிலிருந்து வந்த EK 648 எனும் விமானம்‌ ஊடாக 50 பயணிகள் வருகை தந்துள்ளனர். அத்துடன் துபாயிலிருந்து வந்த EY 264 எனும் விமானம் மூலம் 16 பேரும், கட்டாரின் டோஹாவிலிருந்து வந்த QR 668 எனும் விமானம் மூலம் 12 பேரும், UL 218 எனும் விமானம் மூலம் டோஹாவிலிருந்து மேலும் 06 பேரும் இலங்கையை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும்‌, முப்படைகளினால்‌ நிர்வகிக்கப்படும்‌ தனிமைப்படுத்தல்‌ மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment