பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா

பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டார்கள் என கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொவிட் தொற்றுக்குள்ளான அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் தற்போது களுத்துறை பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பொரளை பொலிஸ் நிலையத்தில் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொரளை பொலிஸிற்கு பொதுமக்கள் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment