கொழும்பில் 30 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம்! விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

கொழும்பில் 30 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம்! விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி

கொழும்பில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேரின் மாதிரிகள் சி.எம்.சி. மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அது மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கையின் 5% என தெரிவித்துள்ள விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி கொழும்பில் உள்ள மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 30,000 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக கருதப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment