மின்னல் தாக்கத்தினால் 250 கோழிக் குஞ்சுகள் இறப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

மின்னல் தாக்கத்தினால் 250 கோழிக் குஞ்சுகள் இறப்பு

முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, ஆங்காங்கே மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் நேற்று முன்தினம் (09) முள்ளிவாய்க்கால் பகுதியில் மின்னல் தாக்கம் பதிவாகியுள்ளது. 

இதன்போது, தென்னை மரம் ஒன்று மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், வாழ்வாதாரத்தின் நிமித்தம் வளர்க்கப்பட்ட 250 இற்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகளும் மின்னல் தாக்கத்தினால் இறந்துள்ளன.

(விஜயரத்தினம் சரவணன்)

No comments:

Post a Comment