அம்பாறையில் மூவருக்கும், திருகோணமலையில் ஒருவருக்கும் கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

அம்பாறையில் மூவருக்கும், திருகோணமலையில் ஒருவருக்கும் கொரோனா!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சுகாதார பிராந்தியத்திற்குட்பட்ட பகுதியில் மூன்று பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருகோணமலையில் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ. லதாகரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியில் ஒருவரும் பொத்துவில் பகுதியில் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பேலியகொலை மீன் சந்தையுடன் தொடர்புபட்டவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தி அவர்கள் சோதனைகளுக்குட்படுத்தப்படுவதுடன் அவர்களில் கொரோனா தொற்று உள்ளவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுடன் தொடர்புபட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனடிப்படையில் சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரனா தொற்று அடையாளப்படுத்தப்பட்டதுடன் பொத்துவில் பகுதியை சேர்ந்த இருவரும் இன்று அடையாளப்படுத்தப்பட்டனர்.

பொத்துவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் பேலியகொடையுடன் நேரடி தொடர்பு உடையவர்கள் எனவும், சாய்ந்தமருதில் அடையாளம் காணப்பட்டவர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்டு இனங்காணப்பட்டவருடன் பழகியவர் எனவும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் 10 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 12 பேரும், அம்பாறை பகுதியில் 03 பேரும் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மூன்று மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடுமையான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment