வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குழந்தையின் தந்தைக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குழந்தையின் தந்தைக்கு கொரோனா

கொழும்பு ரிஜ்வே ஹார்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை ஒன்றின் தந்தைக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5 மாத வயதுடைய குறித்த குழந்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் தற்காலிகமாக கொடிகாவத்தை பிரதேசத்தில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் கண்டி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த இருவரும் வைத்தியசாலைக்கு கடந்த தினம் வருகை தந்த போது அவர்களிடம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ இதுவரையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பாதுகாப்பு நடவடிக்கையாக குறித்த குழந்தை சிகிச்சை பெறும் வார்டின் அனைத்து ஊழியர்களுக்கும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிஜ்வே ஹார்யா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

குழந்தையின் தந்தை இடைக்கிடை வைத்தியசாலைக்கு வருகை தந்தமையால், அவர்கள் இருந்த விடுதியிலுள்ள அனைவரையும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

No comments:

Post a Comment