தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பாரென கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
அதேவேளையில், பேச்சாளர் பதவிக்கு எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது பெயர்கள் பிரேரரிக்கப்பட்ட நிலையில், முரண்பாடுகள் மேலோங்கியதால் பேச்சாளர் தெரிவு நேற்றும் நடைபெறவில்லை.
பேச்சாளர் தெரிவு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் எம்.ஏ.சுமந்திரனே அதுவரை தொடர்ந்தும் பேச்சாளராகச் செயற்படுவாரென கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பேச்சாளர் பதவிகளுக்கான தெரிவை மேற்கொள்வதற்காக கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு பாராளுமன்ற குழு அறையில் நேற்று நண்பகல் 11.00 மணியளவில் கூடியது. இதன்போது கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment