மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, மணல்பிட்டி பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் உரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்து நிலையல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம இன்று (09) பகல் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய தவக்குமார் டிலஷன், 19 வயதுடைய ஞானசேகரன் கிளிசஷன் என்ற இரு இளைஞர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை, தாந்தமலை பிரதான வீதியில் இன்று பகல் 11 மணியளவில் கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து தாந்தாமலை பகுதியை நோக்கி உழவு இயந்திரத்தில் 4 பேர் பிரயாணித்தனர்.
இதன்போது மணல்பிட்டி சந்திப் பகுதியில் வீதியில் வந்த முச்சக்கர வண்டி ஒன்றிற்கு வழிவிட முற்பட்ட போது வேகமாக சென்ற உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானத்தில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த இருவரும் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் உயிரிழந்தவர்களின் சடலம் மட்டு. போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு நிருபர் சரவணன்
No comments:
Post a Comment