நடைபெறவுள்ள பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று நற்பெயரைப் பெற்றுக் கொடுக்க ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் அமீர் அலி - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

நடைபெறவுள்ள பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று நற்பெயரைப் பெற்றுக் கொடுக்க ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் அமீர் அலி

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையையும் எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும்> அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நடைபெற உள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை மற்றும் உயர்தர பரிட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடம் உலகத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக எமது நாட்டில் உரிய காலத்தில் மேற்படி பரீட்சைகள் இடம்பெறாமல் காலதாமதமாகி மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டது.

இவ்வாறு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவச் செல்வங்கள் நடைபெறவுள்ள பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று எமது நாட்டுக்கும் தான் சார்ந்த சமூகத்துக்கும் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நற்பெயரைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்தி பிரார்த்திக்கின்றேன்.

சுகாதார அமைச்சினால் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி பரீட்சைகளில் பங்கு கொள்ளுமாறும் இச்சந்தர்ப்பத்தில் மாணவச் செல்வங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்தின மாணவர்களும் நடைபெறவுள்ள இரண்டு பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது மாவட்டத்தை கல்வியின் பால் முன்னேறிய மாவட்டமாக மாற்ற வேண்டுமென்று இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்தித்துக் கொள்கிறேன் எனத்தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment