சீனாவின் டிக்-டொக் செயலிக்கு தடை விதித்தது பாகிஸ்தான் - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

சீனாவின் டிக்-டொக் செயலிக்கு தடை விதித்தது பாகிஸ்தான்

ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் டிக்-டொக் செயலிக்கு தடை விதித்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக்-டொக்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது உண்டு. 

அந்த வகையில், டிக்-டொக் செயலியில் ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான விடியோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் அந்த செயலிக்கு தடை விதித்துள்ளது. 

சமூகத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்த தொடர் முறைப்பாடுகளை அடுத்து டிக்-டொக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

சீனாவின் நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தான், அந்நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான செயலியை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment