கல்கிரியாகம - தானியாகம பகுதியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயொன்றிலிருந்து ஒரு தொகை 12 ரக வெற்றுத் துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடி மருந்துகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிரியாகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய வியாழக்கிழமை தானியாகம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலேயே குறித்த துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடி மருந்துகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு 12 வகை துப்பாக்கிகளுக்காகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகள் 65 மற்றும் அந்த ரவைகளில் பயன்படுத்தப்படும் கெப் வெடி மருந்துகள் 210 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
இவை மிகவும் சூட்சுமமான முறையில் கால்வாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த துப்பாக்கி ரவைகளை அங்கு மறைத்து வைத்த சந்தேக நபர்கள் மற்றும் மறைத்து வைக்கப்பட்ட காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment